Live Breaking News & Updates on Tamil movie news

Stay informed with the latest breaking news from Tamil movie news on our comprehensive webpage. Get up-to-the-minute updates on local events, politics, business, entertainment, and more. Our dedicated team of journalists delivers timely and reliable news, ensuring you're always in the know. Discover firsthand accounts, expert analysis, and exclusive interviews, all in one convenient destination. Don't miss a beat — visit our webpage for real-time breaking news in Tamil movie news and stay connected to the pulse of your community

மறக்க முடியுமா? - 7ஜி ரெயின்போ காலனி - Marakka Mudiyuma : 7g Rainbow colony


மறக்க முடியுமா? - 7ஜி ரெயின்போ காலனி
17 பிப், 2021 - 15:38 IST
0 கருத்துகள்  à®•à®°à¯à®¤à¯à®¤à¯ˆà®ªà¯ பதிவு செய்ய
எழுத்தின் அளவு:
படம் : 7ஜி ரெயின்போ காலனி
வெளியான ஆண்டு : 2004
நடிகர்கள் : ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால்
இயக்கம் : செல்வராகவன்
தயாரிப்பு : ஏ.எம்.ரத்னம்
காதலி இறந்த பின்னும், அவள் நினைவோடு வாழும் காதலன். இது தான், 7ஜி ரெயின்போ காலனி படத்தின் கரு. காதல் கொண்டேன் படத்தின் வழியாக வெளிச்சம் பெற்ற இயக்குனர் செல்வராகவன், இப்படத்தின் மூலம் தனித்துவமான இயக்குனராக, கவனம் பெற்றார். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன், ரவி கிருஷ்ணா, இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
'ஹவுசிங் போர்ட்' குடியிருப்பில் வாழும், நடுத்தர வர்க்க குடும்பத்தையும், அங்கு வளரும் இளைஞர்களின் வாழ்வையும், வெகு இயல்பாக பதிவு செய்தது, 7ஜி ரெயின்போ காலனி. சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த சுவாதி தான், இதில் நாயகியாக நடித்தார். சில காரணங்களால், படத்தில் இருந்து விலக, சோனியா அகர்வால் நாயகியானார்.
'கதிர் - அனிதா' கதாபாத்திரங்களில் ரவி கிருஷ்ணாவும், சோனியா அகர்வாலும் வாழ்ந்திருந்தனர் எனலாம். நாயகனின் தந்தையாக நடித்த விஜயன், நம் தந்தையை கண்முன் நிறுத்தினார். அவர், 'அவனுக்குள்ளயும் ஏதோ இருந்திருக்கு பாரேன்' என சொல்லி கண்ணீர் சிந்தும்போது, தியேட்டரின் கனத்த மவுனம் நிலவியது.
இந்த ஒரு படத்துக்கு மட்டும், 25 தீம் இசைத் துணுக்குகளை உருவாக்கியிருந்தார், யுவன் சங்கர் ராஜா. இசையின் வழியே உணர்வுகளை கடத்தியிருந்தார். அவரின் இசைப் பயணத்தில், 7ஜி ரெயின்போ காலனி மிக முக்கிய படம் .நா.முத்துக்குமாரின் வரிகள், இளைஞர்களை என்னவோ செய்தது. 'நினைத்து நினைத்து பார்த்தால், கனா காணும் காலங்கள், நாம் வயதுக்கு வந்தோம், கண் பேசும் வார்த்தைகள், இது போர்க்களமா, ஜனவரி மாதம், நினைத்து நினைத்து பார்த்தேன்...' ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
வசூலை வாரி குவித்த இப்படம் தெலுங்கு, பெங்காலி, ஒடியா, கன்னடம், ஹிந்தி என, பல்வேறு மொழிகளில், 'ரீமேக்' செய்யப்பட்டது.
7ஜி ரெயின்போ காலனியை மறக்க முடியுமா?
Advertisement
கருத்துகள் (0)
கருத்தைப் பதிவு செய்ய

7grainbowcolony , Ravi-krishna , Sonia-aggarwal , Selvaraghavan , Yuvanshankarraja , Tamil-cinema-news , Tamil-cinema , Tamil-movies , Tamil-film , Kollywood , Tamil-news

மறக்க முடியுமா? - ஆட்டோகிராப் - Marakka Mudiyuma : Autograph


மறக்க முடியுமா? - ஆட்டோகிராப்
16 பிப், 2021 - 12:58 IST
0 கருத்துகள்  à®•à®°à¯à®¤à¯à®¤à¯ˆà®ªà¯ பதிவு செய்ய
எழுத்தின் அளவு:
படம் : ஆட்டோகிராப்
வெளியான ஆண்டு : 2004
நடிகர்கள் : சேரன், சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா
இயக்கம் : சேரன்
தயாரிப்பு : சேரன்
பிரேமம், 96 படங்களுக்கு எல்லாம் முன்னோடி, ஆட்டோகிராப்! ஒருவனுக்கு பள்ளி மற்றும் கல்லுாரி காலங்களில் தோன்றும் காதல்களும், அதை இழந்த வலியையும், அதற்கு நட்பு கொடுத்த ஆறுதலும் தான், இப்படத்தின் கதைக்களம்.
ஒவ்வொரு பருவ காதலையும், ரவி வர்மன், விஜய் மில்டன், துவாரகாந்த், ஷாங்கி மகேந்திரன் என, தனித்தனி ஒளிப்பதிவாளர்கள் படம் பிடித்தனர். அது, பார்வையாளர்களுக்கு வித்தியாசத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ஏதோ ஒரு காட்சி நம்மை, கடந்த காலத்திற்கு இழுத்துச் செல்லும், மேஜிக் இப்படத்தில் இருந்தது. அதனால் படம், சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. மேலும் விமர்சன ரீதியாகவும், படம் பாராட்டப்பட்டது.
இப்படத்தில் நடிப்பதற்காக விஜய், பிரபுதேவா, விக்ரம் என, பல்வேறு நடிகர்கள் அணுகப்பட்டனர். பல்வேறு காரணங்களால், அவர்கள் இப்படத்தில் நடிக்க முடியவில்லை. இதையடுத்து நடிகராக களமிறங்கினார், இயக்குனர் சேரன். நடிகராக அவரின் இரண்டாவது படம் இது.
படத்தின் பின்னணி இசையை, சபேஷ் - -முரளி மேற்கொண்டனர். சேரன், நடிப்பிலும் சோடை போகவில்லை. கேரள மண்ணில், கோபிகா உடனான காதலில், அவ்வளவு ஈர்ப்பு இருந்தது. ஆணும், பெண்ணும் நட்பாக பழக முடியும் என்பதை, சினேகாவின் கதாபாத்திரம் மூலம் அறிவுறுத்தினார் சேரன்.
பரத்வாஜ் இசையில், ஞாபகம் வருதே, கிழக்கே பார்த்தேன், மனசுக்குள்ளே தாகம், மீசை வச்ச பேராண்டி, நினைவுகள் நெஞ்சினில், ஒவ்வொரு பூக்களுமே... பாடல்கள் தமிழர்களை தாலாட்டின.
ஒவ்வொரு பூக்களுமே... பாடலுக்காக, பின்னணி பாடகி சித்ரா, பாடலாசிரியர் பா.விஜய் ஆகியோர், தேசிய விருது பெற்றனர். மேலும், சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான தேசிய விருதையும் இப்படம் பெற்றது. பிலிம்பேர் மற்றும் தமிழக அரசின் விருதுகளையும் இப்படம் அள்ளியது. இப்படம் பல்வேறு மொழிகளில், ரீமேக் செய்யப்பட்டது.
அனைவரது மனதிலும், ஆட்டோகிராப் உள்ளது!
Advertisement
கருத்துகள் (0)
கருத்தைப் பதிவு செய்ய

Autograph , Cheran , Sneha , Gopika , Tamil-cinema-news , Tamil-cinema , Tamil-movies , Tamil-film , Kollywood , Tamil-news , Tamil-actors-gallery

மறக்க முடியுமா? - குடைக்குள் மழை - Marakka Mudiyuma : Kudaikul Mazhai


மறக்க முடியுமா? - குடைக்குள் மழை
10 பிப், 2021 - 19:44 IST
1 கருத்துகள்  à®•à®°à¯à®¤à¯à®¤à¯ˆà®ªà¯ பதிவு செய்ய
எழுத்தின் அளவு:
படம் : குடைக்குள் மழை
வெளியான ஆண்டு : 2004
நடிகர்கள் : பார்த்திபன், மதுமிதா
இயக்கம் : பார்த்திபன்
தயாரிப்பு : பயாஸ்கோப் பிலிம் பிரேம்ஸ்
'மல்டிபிள் பர்சனாலிட்டி' எனும், நமக்குள் இருக்கும் அன்னியனை அறிமுகப்படுத்திய படம், குடைக்குள் மழை. இப்படத்தில் இருந்து, ஒரு பகுதி ஆடை, மறுபகுதி அந்நியன் என பரிணாமம் எடுத்தது எனலாம்.
மறைவாய் கேமராவை வைத்து, பொதுமக்களிடம் நிஜம் போலவே ஒரு நிகழ்ச்சியை நடத்தி, இறுதியில் எல்லாம் சும்மா தான் என்ற, 'ப்ராங்க் ஷோ' காரணமாக, ஒருவனுக்குள் நிகழும் மன விரிசல் தான், இப்படத்தின் கதைக்களம். அந்த மன விரிசல், இன்னொரு நபரை உருவாக்கி, அதை கொன்று, நமக்குள் பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்வார், இயக்குனர் பார்த்திபன்.
'என்ன... படம் ஒரு மாதிரிப் போகுதே...' என, சோம்பல் முறிக்கும்போது தான், யாரும் எதிர்பார்க்காத, 'கிளைமாக்ஸ்' வரும். படத்தின் இறுதி காட்சி, ஒட்டுமொத்த படத்தையும் திரும்ப நினைவுகூரச் செய்யும். 'ஓ... இதுக்காகத் தான், அந்த காட்சி வந்ததா...' என, ரசிகர்களை சிலர்க்க வைத்திருப்பார், பார்த்திபன்.
உடைந்த பல்ப் துண்டில் நிலா தெரிய செய்வது போல, பல இடங்களில், இயக்குனரின், 'டச்' ரசிக்கச் செய்தது.படத்தின் கலை இயக்குனர் விஜய் முருகன், ஆச்சரியப்பட செய்தார். மேற்கூரையில் நகர்கிற பிரமாண்ட கண்ணாடி கடிகாரம், அவரின் கலைக்கு ஓர் உதாரணம்.
பார்த்திபன் துாக்கு மாட்டிக் கொள்ள, ஒரு பட்டுச் சேலையை எடுக்க, அது கதாநாயகியாக மாறி, அவரைப் படாதபாடு படுத்தும் காட்சியில், சஞ்சயின் கேமராவும், கார்த்திக் ராஜாவின் இசையும், 'மேஜிக்' நிகழ்த்தியிருக்கும். தரமான படம் தான்; ரசிகர்கள் புரிந்து கொள்ள கொஞ்சம் காலதாமதம் ஆனது. அதுவே, இப்படத்தின் வசூல் ரீதியான தோல்விக்கு காரணமாக அமைந்தது.
பார்த்திபன் விழும்போதெல்லாம் விதை!
Advertisement
கருத்துகள் (1)
கருத்தைப் பதிவு செய்ய

Kudaikulmazhai , Parthiban , Tamil-cinema-news , Tamil-cinema , Tamil-movies , Tamil-film , Kollywood , Tamil-news , Tamil-actors-gallery , Tamil-actress-gallery , Tamil-actor-wallpapers

மறக்க முடியுமா? - திருமலை - Marakka Mudiyuma : Thirumalai

Marakka Mudiyuma : Thirumalai | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Thirumalai , Vijay , Jyothika , Directorramana , Tamil-cinema-news , Tamil-cinema , Tamil-movies , Tamil-film , Kollywood , Tamil-news , Tamil-actors-gallery

மறக்க முடியுமா? - பிதாமகன் - Marakka Mudiyuma : Pidhamagan


மறக்க முடியுமா? - பிதாமகன்
07 பிப், 2021 - 10:06 IST
0 கருத்துகள்  à®•à®°à¯à®¤à¯à®¤à¯ˆà®ªà¯ பதிவு செய்ய
எழுத்தின் அளவு:
படம் : பிதாமகன்
வெளியான ஆண்டு : 2003
நடிகர்கள் : விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா
இயக்கம் : பாலா
தயாரிப்பு : வி.ஏ.துரை
சேது, நந்தா என, வித்தியாசமான கதை களத்தில் முன்னோக்கி சென்ற இயக்குனர் பாலா, தன் மூன்றாவது படமான பிதாமகன் மூலம், அசுர பாய்ச்சல் நிகழ்த்தினார். இப்படத்தின் கதாநாயகன், சுடுகாட்டில் பிணம் எரிக்கும் வேலை செய்யும் வெட்டியான். கஞ்சா விற்கும் பெண், கதாநாயகி. சின்ன சின்ன பித்தலாட்டம் செய்யும் நண்பன். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை பற்றி, தமிழ் சினிமா கதை சொன்னதில்லை. பாலா, எடுத்துக் காட்டினார்!
விக்ரம், சூர்யா இருவரையும் இணைத்து, மூன்றாவது படத்தை இயக்கியிருந்தார், பாலா. சுடுகாட்டு பாடலை தவிர வேறு ஏதும் தெரியாத, பேசாத, அழுக்கு உடையும், கரைபடிந்த பற்களும் உடைய சித்தனாக, விக்ரம் மிரட்டியிருந்தார். அவரின் உடல்மொழி, கோபம் அனைத்தும், தனிபெரும் நடிகனாக விக்ரமை காட்டியது. இப்படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகர் எனும் தேசிய விருது அவருக்கு கிடைத்தது.
விக்ரமிற்கு நேர் எதிர் கதாபாத்திரம், சூர்யாவிற்கு. அட அவருக்குள், இவ்வளவு அற்புதமான காமெடி நடிகர் இருக்கிறாரா என, அனைவரையும் வியக்க செய்தார். சீரியஸ் படத்திற்கு, சூர்யாவும், லைலாவும் தான் ரிலாக்ஸ் தந்தனர்.
படத்தின் மற்றொரு துாண், இளையராஜாவின் இசை. இளங்காத்து வீசுதே... என, தமிழகத்தை தாலாட்டியவர், பின்னணியில் இசையில் அசரடித்திருந்தார்.
தமிழில் அறிமுகமான மகாதேவன், இப்படத்தின் மூலம் தனிகவனம் பெற்றனர். இப்படத்தில் சில நாட்கள் நடித்த பின், சில பிரச்னையால், விக்ரம் விலகினார். அதன் பின் முரளி, சித்தன் கதாபாத்திரத்திற்காக அணுகப்பட்டார். பின் தயாரிப்பு தரப்பு மேற்கொண்ட முயற்சியால், விக்ரம் தொடர்ந்து நடித்தார். சங்கீதா கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தவர், சிம்ரன். திருமணம் காரணமாக, மூன்று நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுக்கப்பட்டு, பாடல் ஒன்றுக்கு மட்டும் சிம்ரன் பயன்படுத்திக்கொள்ளப்பட்டார்.
தமிழ் சினிமா இன்னும் நுழைய கதைகளங்கள் நிறைய உள்ளது என்றது, பிதாமகன்!
Advertisement
கருத்துகள் (0)
கருத்தைப் பதிவு செய்ய

Pidhamagan , Vikram , Suriya , Director-bala , Ilayaraja , Tamil-cinema-news , Tamil-cinema , Tamil-movies , Tamil-film , Kollywood , Tamil-news

மறக்க முடியுமா? - காதல் கொண்டேன் - Marakka Mudiyuma : Kadhal Kondaen


மறக்க முடியுமா? - காதல் கொண்டேன்
05 பிப், 2021 - 13:43 IST
0 கருத்துகள்  à®•à®°à¯à®¤à¯à®¤à¯ˆà®ªà¯ பதிவு செய்ய
எழுத்தின் அளவு:
படம் : காதல் கொண்டேன்
வெளியான ஆண்டு: 2003
நடிகர்கள்: தனுஷ், சோனியா அகர்வால், நாகேஷ்
இயக்கம்: செல்வராகவன்
தயாரிப்பு: கே விமலா கீதா
தன் வழி தனி வழி என தமிழ் சினிமாவில் பயணிக்கும் இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். தம்பி தனுஷ் நடித்த, துள்ளுவதோ இளமை படத்தில், கதை ஆசிரியராக பணியாற்றினார். இப்படத்தை, அவர்களின் தந்தை, கஸ்துாரி ராஜா இயக்கியதாக கூறப்பட்டாலும், அதில் செல்வராகவனின், டச் இருந்தது.
நோஞ்சான் உடம்புடைய தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை வெற்றிக்கு காரணம், படத்தில் இருந்த ஆபாச காட்சிகள் என, அப்போது விமர்சிக்கப்பட்டன. அதன் பின், தனுஷை வைத்து, 2003ல், செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படம், இருவருக்கும் மிகப்பெரிய வரவேற்பைக் கொடுத்தது. அதன்பின், இருவரும் தமிழ் சினிமாவில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
கடந்த, 1996ல் வெளிவந்த ஹாலிவுட் படமான பியர் படத்தை தழுவி, இப்படம் உருவாக்கப்பட்டது. ரொமான்டிக் சைக்கோ த்ரில்லர் வகையை சேர்ந்தது. தமிழ் சினிமா கையாண்டு வந்த கதாநாயக பிம்பத்தை, உடைத்தெறிவது, செல்வராகவனின் வழக்கம். மன நலம் பாதிக்கப்பட்டவன், பஸ்சில் செருப்படி வாங்கியவன், பணத்திற்காக வேலை செய்யும் கூலி என, நம் முன் திரிந்த நபர்களின் சாயல்களில், கதாநாயகனை உருவாக்கி இருப்பார்.
ஒரு ஆதரவற்ற இளைஞனின் மனம், ஒரு பெண்ணின் அன்பை அனுபவிக்கத் துவங்கும்போது, அது கைநழுவும் சந்தர்ப்பத்தை எப்படி எதிர்கொள்கிறான் என்ற உளவியலை, நேர்த்தியாகப் பேசியிருந்தது, காதல் கொண்டேன்.
முகத்தில் தாடியுடனும், புட்டிக் கண்ணாடியுடனும் தனுஷ், திவ்யா... திவ்யா... என்று போட்ட ஆட்டம், தமிழகத்தை அதிரச் செய்தது. இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் யுவன் சங்கர் ராஜாவின் இசை. தேவதையை கண்டேன், மனசு ரெண்டும், தொட்டு தொட்டு போகும், நெஞ்சோடு, காதல் காதல்... பாடல்கள், தமிழகத்தையே உலுக்கியது எனலாம். இப்படம் தெலுங்கு, கன்னடா, பெங்காலி மொழிகளில், ரீமேக் செய்யப்பட்டது.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!காதல் கொண்டேன்
Advertisement
கருத்துகள் (0)
கருத்தைப் பதிவு செய்ய

Kadhalkondaen , Dhanush , Sonia-aggarwal , Selvaraghavan , Yuvanshankarraja , Tamil-cinema-news , Tamil-cinema , Tamil-movies , Tamil-film , Kollywood , Tamil-news

மறக்க முடியுமா? - அன்பே சிவம் - Marakka Mudiyuma : Anbesivam


மறக்க முடியுமா? - அன்பே சிவம்
31 ஜன, 2021 - 09:09 IST
1 கருத்துகள்  à®•à®°à¯à®¤à¯à®¤à¯ˆà®ªà¯ பதிவு செய்ய
எழுத்தின் அளவு:
படம் : அன்பே சிவம்
வெளியான ஆண்டு : 2003
நடிகர்கள் : கமல், மாதவன், கிரண், நாசர்
இயக்கம் : சுந்தர்.சி
தயாரிப்பு : லட்சுமி மூவி மேக்கர்ஸ்
முன் பின் தெரியாத ஒரு மனுஷனுக்காக கண்ணீர் விடுற, அந்த மனசு இருக்கே.. அது தான் கடவுள் என்றது, அன்பே சிவம்! மசாலா படங்கள், வசூலை கொடுக்கும்; ஆனால், காலம் கடந்து நிலைத்து நிற்காது. அன்பே சிவம் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியதால், இயக்குனராகவும், இணை தயாரிப்பாளராகவும் இருந்த சுந்தர்.சி பெரும் பாதிப்புக்கு உள்ளானார். அதன் பின், வழக்கமான மசாலா படங்களை கொடுத்து வருகிறார். ஆனாலும், இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் சுந்தர்.சியின் பெயர் சொல்லும் படம், அன்பே சிவம் தான்.
கம்யூ., கலைஞராக மீசையை முறுக்கும்போது, கமல் அவ்வளவு கம்பீரம். விபத்திற்கு பின், முகத்தில் தழும்புடன் அன்பை பரப்பும் போது, கமல் அவ்வளவு சாந்தம். கமல், தன் பெயரில் இருக்கும், சிவம் பிடிக்காத நல்லா. மாதவன், அன்பு பிடிக்காத ஏ.அர்ஸ். இந்த இருவரது பயணத்தில் துவங்குகிறது, அன்பே சிவம். படத்தை எத்தனை முறை பார்த்தாலும், புதிய எண்ணங்களை நமக்குள் தோற்றுவிக்கும். ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செதுக்கியிருந்தார், கமல்.
இப்படத்தின் இரண்டாம் நாயகனாக, மாதவன். வெறுப்பை, கண்ணீரை தேவையான அளவில் வெளிப்படுத்தி இருந்தார். இக்கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர், அரவிந்த் சாமி.கிரண், நாசர், கம்யூ., தோழர்கள் என, படத்தில் இடம்பெற்ற அனைவரும், கதையை சுமந்திருந்தனர். இப்படத்தில், மதனின் வசனங்கள், ஹைலைட்டாக அமைந்தன.
தமிழகத்தை சுனாமி தாக்கும் முன், இப்படத்தில் இடம்பெற்ற சுனாமி பற்றிய வசனம் இடம்பெற்றிருக்கும். இது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வித்யாசாகர் இசையில், யார் யார் சிவம், ஏலே மச்சி, பூ வாசம், நாட்டுக்கொரு செய்தி... பாடல்கள் வெகு சிறப்பாக இருந்தன.
அன்பு தான் சார் கடவுள்!
Advertisement
கருத்துகள் (1)
கருத்தைப் பதிவு செய்ய

Anbe-sivam , Kamal-haasan , Madhavan , Kiran , Sundarc , Tamil-cinema-news , Tamil-cinema , Tamil-movies , Tamil-film , Kollywood , Tamil-news

மறக்க முடியுமா? - மவுனம் பேசியதே - Marakka Mudiyuma : Mounam pesiyadhe

Marakka Mudiyuma : Mounam pesiyadhe | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

Mounampesiyadhe , Suriya , Trisha , Director-ameer , Tamil-cinema-news , Tamil-cinema , Tamil-movies , Tamil-film , Kollywood , Tamil-news , Tamil-actors-gallery

மறக்க முடியுமா? - ஜெமினி - Marakkamudiyuma


மறக்க முடியுமா? - ஜெமினி
22 ஜன, 2021 - 09:57 IST
0 கருத்துகள்  à®•à®°à¯à®¤à¯à®¤à¯ˆà®ªà¯ பதிவு செய்ய
எழுத்தின் அளவு:
படம் : ஜெமினி
வெளியான ஆண்டு : 2002
நடிகர்கள் : விக்ரம், கிரண், கலாபவன் மணி, முரளி, வினுசக்ரவர்த்தி
இயக்கம் : சரண்
தயாரிப்பு : ஏ.வி.எம்.,
'ஓ போடு' என, தமிழகம் எங்கும் பட்டையைக் கிளப்பிய படம், ஜெமினி. ரவுடிகளான, 'வெள்ளை' ரவி, சேரா ஆகியோர், ஒரு போலீஸ் அதிகாரியின் ஆதரவுடன், தங்களை சீர்திருத்திக் கொண்டனர். இந்த சம்பவத்தால் ஈர்க்கப்பட்ட சரண், அதை அஜித் நடிப்பில் உருவாக்க திட்டமிட்டார்.
ஏறுமுகம் என்ற தலைப்பில், அப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் அஜித், படத்தில் இருந்து விலகினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 'இனி அஜித்துடன் இணைய மாட்டேன்' என அறிவிக்கும் அளவிற்கு விரக்தி அடைந்தார், சரண். ஆனாலும், சினிமா அரசியலின் படி அட்டகாசம், அசல் படங்களில், அந்த ஜோடி இணைந்தது.
ஏறுமுகம் படத்தில் இருந்து அஜித் விலகி நிலையில், அதே கதையை ஜெமினி என்ற பெயரில், விக்ரம் நடிப்பில், சரண் உருவாக்கினார். கடந்த, 1997ல் வெளியான மின்சார கனவு படத்திற்கு பின், ஐந்தாண்டு இடைவெளிக்கு பின், ஏ.வி.எம்., நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.
ரவுடிகளான விக்ரமும், கலாபவன் மணியும் அடிக்கடி மோதிக் கொள்கின்றனர். காவல் துறை அதிகாரியான முரளி, அவர்களை சீர்திருத்த முயற்சிக்கிறார். அவரின் முயற்சி வெற்றி பெற்றதா என்பது தான், சுவாரஸ்யமான திரைக்கதை.
கிரண், இப்படத்தில் அறிமுகமானார். விக்ரம் - கிரண் காதல் காட்சிகள் ரசிக்கச் செய்தன. கலாபவன் மணி உடல்மொழியுடன், 'மிமிக்ரி' செய்து, வித்தியாசமாக வில்லத்தனம் செய்திருந்தார். காவல் துறை அதிகாரி சிங்கபெருமாளாக, முரளி தன் அனுபவ நடிப்பை காட்டியிருந்தார்.
பரத்வாஜ் இசையில், 'ஓ போடு, பெண்ணொருத்தி, தீவானா, காதல் என்பதா, கட்ட கட்ட...' பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன. ஜெமினி ராசியில் வசூல் மழை கொட்டியது!
Advertisement
கருத்துகள் (0)
கருத்தைப் பதிவு செய்ய

Geminimovie , Vikram , Kiran , Directorsaran , Tamil-cinema-news , Tamil-cinema , Tamil-movies , Tamil-film , Kollywood , Tamil-news , Tamil-actors-gallery

மறக்க முடியுமா? - கன்னத்தில் முத்தமிட்டால் - Marakkamudiyuma


மறக்க முடியுமா? - கன்னத்தில் முத்தமிட்டால்
21 ஜன, 2021 - 19:12 IST
0 கருத்துகள்  à®•à®°à¯à®¤à¯à®¤à¯ˆà®ªà¯ பதிவு செய்ய
எழுத்தின் அளவு:
படம் : கன்னத்தில் முத்தமிட்டால்
வெளியான ஆண்டு : 2002
நடிகர்கள் : மாதவன், சிம்ரன், கீர்த்தனா, நந்திதா தாஸ்
இயக்கம் : மணிரத்னம்
தயாரிப்பு : மெட்ராஸ் டாக்கீஸ்
போராளியாக இருக்கும் தன் தாயிடம், 'ஏன் என்னை பிரிந்து சென்றீர்?' உட்பட, 20 கேள்வி கேட்கும் சிறுமி என்பது தான், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் கரு. மணிரத்னத்தின் இன்னுமொரு, 'மாஸ்டர் பீஸ்' படைப்பு.
இலங்கை இனப் பிரச்னை பின்னணியில், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது என்றாலும், அப்போராட்டம் குறித்து, தீவிர அரசியல் பேசவில்லை. ஈழ விஷயத்தில், மணிரத்னம் விரும்பியது அமைதி. அதைத் தான், அவர் தன் படைப்பில் பிரதிபலித்தார்.
ஆங்கில செய்திதாளில் கிடைத்த ஒரு தகவலை அடிப்படையாக கொண்டு, மணிரத்னம் திரைப்படம் இயக்க முடிவு செய்தார். அந்த கருவை அடிப்படையாக வைத்து, எழுத்தாளர் சுஜாதா, 'அமுதாவும் அவனும்' என்ற தலைப்பில், சிறுகதை எழுதினார். அதை திரைக்கதையாக மாற்றினார், மணிரத்னம்.
அமுதாவாக, பார்த்திபனின் மகள் கீர்த்தனா நடித்திருப்பார். அவ்வளவு துறுதுறு, சோகம், கோபம் என, முதல் படத்திலேயே, தேசிய விருது பெறும் அளவிற்கு நடித்திருந்தார். கீர்த்தனா, நந்திதா தாஸிடம், 20 கேள்விகள் கேட்க எழுதி வைத்து இருப்பார். அப்போது நந்திதா தாஸின் நடிப்பு மிக அற்புதமாக இருக்கும்.
மணிரத்னம் படங்களில், மிகச் சுருக்கமாகத் தான் வசனம் இருக்கும். இப்படத்தில் சுஜாதா வசனம் எழுதியதால், நறுக்குதெறித்தது போல வசனம் இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும், ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவும், படத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தின.
இப்படம் தெலுங்கு மற்றும் மலையாளத்தில், அம்ருதா என்ற தலைப்பில், 'டப்பிங்' செய்து வெளியிடப்பட்டது. தேசிய அளவில் மட்டுமின்றி, ஜெருசலேம், லாஸ் ஏஞ்சல்ஸ், ரிவர்ரன், நியூ ஹவன், வெஸ்ட்செஸ்டர் உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில், இப்படம் விருதுகளை அள்ளி குவித்தது.-
கன்னத்தில் முத்தமிட்டாள் நமக்கு மனசு கனத்தது!
Advertisement
கருத்துகள் (0)
கருத்தைப் பதிவு செய்ய

Kannathilmuthamital , Madhavan , Simran , Keerthanaparthiban , Mani-ratnam , Ar-rahman , Tamil-cinema-news , Tamil-cinema , Tamil-movies , Tamil-film , Kollywood