Latest Breaking News On - Chennai government - Page 1 : vimarsana.com
பதிவு செய்த நாள்
14
ஜூலை
2021
00:23 சென்னை: சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளில், கொரோனா வார்டில் காலியாக உள்ள படுக்கைகள், மருத்துவ கட்டமைப்புகளை தொடர்ந்து பராமரிக்க, மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா முதல் அலை தொற்று குறைந்த போது, கூடுதலாக அமைக்கப்பட்ட மருத்துவ கட்டமைப்புகள் அகற்றப்பட்டன.குறைகிறது தொற்றுஇதற்கிடையே, இரண்டாம் அலை தொற்று, மின்னல் வேகத்தில் பரவியதால், படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் பலரும் தவித்தனர். சிலர், படுக்கை வசதி கிடைக்காததால், சிகிச்சை பெற முடியாமல் இறந்தனர். தற்போது, இரண்டாம் அலை தொற்று மெல்ல குறைந்து வருகிறது. சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில், 2,050 படுக்கைகளில், 165 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
ஓமந்துாரார் மருத்துவமனையில், 750 படுக்கைகளில், 70 பேர்; ஸ்டான்லியில், 100 பேர் என, சென்னையில், 1,000க்கும் குறைவானவர்களே, சிகிச்சை பெறுகின்றனர்.மற்ற, 1,000க்கும் மேற்பட்டோர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
எச்சரிக்கை
தற்போது, இரண்டாம் அலை முடிவுக்கு வரும் நிலையில், மூன்றாம் அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என, மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, குழந்தைகள், வளர் இளம் பருவத்தினரை அதிகம் தாக்கும் என்பதால், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, இரண்டாம் அலை தொற்றுக்கு ஏற்படுத்தப்பட்ட மருத்துவ கட்டமைப்புகளை, அப்படியே பராமரிக்க, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
ChennaiTamil-naduIndiaMadrasYoungChennai-governmentசென்னைதமிழ்-நாடுஇந்தியாமெட்ராஸ்இளம்