மகாராஷ்ட

மகாராஷ்டிர அமைச்சர்: தடுப்பூசி அரசியல் செய்கிறது மத்திய அரசு


10 Jul 2021 05:30
மும்பை: “தடுப்­பூசி விஷ­யத்­தில் அர­சி­யல் செய்­ய­வில்லை என மத்­திய அமைச்­சர்­கள் கூறு­கின்­ற­னர், ஆனால் உண்­மை­யில் அதுதான் நடக்­கிறது,” என மகா­ராஷ்­டிர மாநில அமைச்­ச­ரும், தேசி­ய­வாத காங்­கி­ரஸ் மூத்த தலை­வ­ரு­மான நவாப் மாலிக் குற்­றம்­சாட்­டி­யுள்­ளார். உலக அள­வில அதி­க­மாக தடுப்­பூசி செலுத்­தி­யோர் எண்­ணிக்­கை­யில் இந்­தியா முத­லி­டம் பிடித்­துள்­ளது. எனி­னும் இந்­தி­யா­வில் தடுப்­பூசி தேவைக்கு ஏற்ப விநி­யோ­கம் இல்லை என்ற புகார் தொடர்ந்து எழுப்­பட்டு வரு­கிறது.
“தடுப்­பூசி தொடர்­பாக பல்­வேறு புள்ளி விவ­ரங்­களை மத்­திய அரசு கூறி வந்­தா­லும் நடை­முறை வேறு மாதி­ரி­யாக உள்­ளது. மாநி­லங்­களில் கள நில­வ­ரம் மற்­றொரு வித­மாக உள்­ளது. நாட்­டின் பல பகு­தி­க­ளி­லும் தடுப்­பூசி பற்­றாக்­குறை தொடர்ந்து நீடித்து வரு­கிறது. தடுப்­பூசி இல்­லா­த­தால் முகாம்­கள் நிறுத்­தப்­ப­டு­கின்­றன. தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வரு­வோ­ருக்கு தடுப்­பூசி இல்­லாத நிலை ஏற்­ப­டக் கூடாது. இந்த விஷ­யத்­தில் மத்­திய அரசு கவ­னத்­து­டன் இருக்க வேண்­டும்,” என்­றார் திரு நவாப் மாலிக்.
அண்மைய காணொளிகள்
13:09

Related Keywords

Bombay , Maharashtra , India , , Maharashtra Secretary , Central Government , Nawab Malik , Point Government , குண்டு , மகாராஷ்டிரா , இந்தியா , மகாராஷ்டிரா செயலாளர் , மைய அரசு , நவாப் மாலிக் ,

© 2025 Vimarsana