vimarsana.com


Advertisement
சென்னை: நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள, ஏ.டி.எம்.,களில், கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கும்பலை பிடிக்க, பல மாநில போலீசார் தீவிர முயற்சி எடுத்த நிலையில், ஹரியானா மாநிலத்திற்கு சென்ற தமிழக தனிப்படை போலீசார், இளநீர், பீடா வியாபாரி போல வேடமிட்டு, கொள்ளையர்களை மடக்கி பிடித்துள்ளனர்.விசாரணைசென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், எஸ்.பி.ஐ., வங்கியின், பணம்
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
சென்னை: நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள, ஏ.டி.எம்.,களில், கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கும்பலை பிடிக்க, பல மாநில போலீசார் தீவிர முயற்சி எடுத்த நிலையில், ஹரியானா மாநிலத்திற்கு சென்ற தமிழக தனிப்படை போலீசார், இளநீர், பீடா வியாபாரி போல வேடமிட்டு, கொள்ளையர்களை மடக்கி பிடித்துள்ளனர்.
விசாரணை
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், எஸ்.பி.ஐ., வங்கியின், பணம் டிபாசிட் செய்யும் வசதியுள்ள, ஏ.டி.எம்., மிஷின்களில், கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.இதே கும்பல், நாட்டின் பல மாநிலங்களில் கொள்ளையில் ஈடுபட்டதும், டில்லி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட, ஐந்து மாநில போலீசார், கொள்ளையர்களை தேடி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, தி.நகர் துணை கமிஷனர் ஹரிகிரண் பிரசாத் தலைமையிலான தனிப்படை போலீசார், ஹரியானா மாநிலத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் அமீர், 37; வீரேந்திர ராவத், 23; நஜிம் உசேன், 25 மற்றும் கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலி, 25 ஆகியோரை சமீபத்தில் கைது செய்தனர்.இவர்களில், முதலில் சிக்கிய மூவரை, சென்னைக்கு அழைத்து வந்த தமிழக போலீசார், அவர்களை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
சவால்
இந்நிலையில், கொள்ளையர்கள் சிக்கிய விதம் குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:கொள்ளை நடந்த இடங்களில் கிடைத்த, கண்காணிப்பு கேமரா பதிவுகளை படமாக்கி, நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு அனுப்பினோம். விமான நிலைய, சி.சி.டி.வி., காட்சி பதிவுகளை வைத்து, கொள்ளையர்கள், ஹரியானா மாநிலம், மேவாட் என்ற இடத்தில் பதுங்கி இருப்பதை உறுதி செய்தோம்.
அங்கு சென்றதும், பல்லப்கர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த, 75 சதவீத இளைஞர்கள், நுாதன கொள்ளை தொழிலில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.தமிழகத்தில், சவுகத் அலி, சஹதப் கான் என்ற இருவரின் தலைமையில், கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியதை உறுதி செய்தோம். இவர்களை பிடிப்பது பெரும் சவாலாக இருந்தது.
ஊர் மக்கள், கொள்ளையர்களுக்கு பாதுகாப்பு அரணாக செயல்பட்டனர். எங்களை ஊருக்குள் நுழைய விடவில்லை. எங்களை தாக்கவும் முயன்றனர். இதனால், முயற்சியை கைவிட்டு, சென்னைக்கு திரும்பியது போல, மாயத்தோற்றத்தை உருவாக்கினோம்.இளநீர் வியாபாரி, பீடா வியாபாரி போல வேடமிட்டு, தேடுதலில் ஈடுபட்டோம். பீடா கடைக்காரர் ஒருவர், சக வியாபாரி என கருதி கொள்ளையர்கள் குறித்து தகவல் தெரிவித்தார்.அப்படித்தான், ஊரை விட்டு வெளியேறிய, எம்.காம்., பட்டதாரியான அமீரை முதலில் பிடித்தோம். பின், வீரேந்திர ராவத், நஜிம் உசேன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சவுகத் அலியை பிடிப்பது கொஞ்சம் சவாலாக இருந்தது. அதிநவீன தொழில் நுட்ப உதவியுடன், இந்த கொள்ளையர்களை பிடித்தோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கொள்ளையர்களின் கொள்கை!
போலீசில் பிடிபட்ட கொள்ளையர்கள் அளித்த வாக்குமூலம்:ஏ.டி.எம்., மையங்களில் கொள்ளையடித்த பணத்தை, மது, மாது, சூது என, எந்த பழக்கத்திற்காகவும் இழக்கக் கூடாது என்பது எங்கள் கொள்கை. கிடைத்த பணத்தை பங்கிட்டு, வசதியான வாழ்க்கை வாழவே விரும்பினோம்.பெரிய சொகுசு வீடு, நிலம், வாகனங்கள், கால்நடைகள் வாங்கவே, அந்த பணத்தை பயன்படுத்துவோம்.இவ்வாறு கொள்ளையர்கள் கூறினர்.
5 நாள் போலீஸ் காவல்
முடிச்சூர், ஏ.டி.எம்., கொள்ளை தொடர்பாக விசாரிக்க, நஜிம் உசேனை,ஏழுநாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, பீர்க்கன்காரணை போலீசார், தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் சஹானா, நஜிம் உசேனை, ஐந்துநாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும்,
My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X

Related Keywords

United States ,Tambaram ,Tamil Nadu ,India ,New Delhi ,Delhi ,Chennai ,Madras ,Haryana ,Virender Rawat ,Haryana State ,Haryana New York ,Luxury House ,ஒன்றுபட்டது மாநிலங்களில் ,தம்பரம் ,தமிழ் நாடு ,இந்தியா ,புதியது டெல்ஹி ,டெல்ஹி ,சென்னை ,மெட்ராஸ் ,ஹரியானா ,வீரேண்டர் ராவத் ,ஹரியானா நிலை ,ஆடம்பர வீடு ,

© 2025 Vimarsana

vimarsana.com © 2020. All Rights Reserved.