Live Breaking News & Updates on India empire

Stay informed with the latest breaking news from India empire on our comprehensive webpage. Get up-to-the-minute updates on local events, politics, business, entertainment, and more. Our dedicated team of journalists delivers timely and reliable news, ensuring you're always in the know. Discover firsthand accounts, expert analysis, and exclusive interviews, all in one convenient destination. Don't miss a beat — visit our webpage for real-time breaking news in India empire and stay connected to the pulse of your community

Германия совершает третью роковую ошибку | Последние новости: России, Украины, Сирии и Мира. Новости Новороссии (ЛНР, ДНР)

Германия совершает третью роковую ошибку | Последние новости: России, Украины, Сирии и Мира. Новости Новороссии (ЛНР, ДНР)
news-front.info - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from news-front.info Daily Mail and Mail on Sunday newspapers.

Moscow , Moskva , Russia , United-states , United-kingdom , Kursk , Kurskaya-oblast- , Georgia , Washington , Belarus , Donbass , Ukraine-general-

আফগানিস্তানে তালেবানের উত্থান, ভারত-বাংলাদেশের সংকট

আফগানিস্তানে তালেবানের উত্থান, ভারত-বাংলাদেশের সংকট 

Ladakh , Jammu-and-kashmir , India , Doha , Ad-daw-ah , Qatar , Afghanistan , United-states , United-kingdom , Iran , Uzbekistan , New-delhi

Mustafa Kemal'in Doğu'dan Batı'ya kapsayıcı politikası 2

Mustafa Kemal'in Doğu'dan Batı'ya kapsayıcı politikası 2
superhaber.tv - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from superhaber.tv Daily Mail and Mail on Sunday newspapers.

Moscow , Moskva , Russia , Afghanistan , United-states , United-kingdom , Iran , Grand-turk , Turks-and-caicos-islands-general- , Turks-and-caicos-islands , Belarus , Mustafa-kemal

"세계사적 관점에서 봐야 '식민지 조선' 제대로 보이죠" : 책&생각 : 문화 : 뉴스 : 한겨레

"세계사적 관점에서 봐야 '식민지 조선' 제대로 보이죠" : 책&생각 : 문화 : 뉴스 : 한겨레
hani.co.kr - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from hani.co.kr Daily Mail and Mail on Sunday newspapers.

Seoul , Soult-ukpyolsi , South-korea , Heilong , Henan , China , Japan , United-states , India , Paris , France-general- , France

வேலியே பயிரை மேய்ந்தால்...


வேலியே பயிரை மேய்ந்தால்...
By டி.எஸ். தியாகராசன்  |  
Published on : 29th July 2021 03:15 AM  |   அ+அ அ-   |  
  |  
 
அரசு அலுவலா்கள், அரசின் சொத்துகளைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் இருப்பவா்கள். அரசு விதிகளை மீறி பொதுச்சொத்திற்கு சேதம் விளைவிப்பவா்களைக் கண்டுபிடித்து தண்டனை வழங்கவல்ல அதிகாரம் படைத்தவா்கள். அரசின் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டியவா்களே அதனை தங்கள் சுயநலத்திற்காக ஆவணங்களை திருத்தி அல்லது மாற்றி பெரும் லாபம் ஈட்டுகிறாா்கள் என்ற செய்தி வெளியுலகிற்குத் தெரிய வரும்போது ‘வேலியே பயிரை மேய்ந்தால்’ என்ற சொலவடைதான் நினைவுக்கு வருகிறது.
பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் அறம் போதிக்கும் அற்புத நூல்கள். முன்னை நாளில் தமிழா்தம் நாவில் தினமும் நடமாடிய நற்சொற்கள். அவற்றைப் புன்சொற்களாக எண்ணிக் கொண்டு இந்நாளைய அரசு அலுவலா்கள் ‘ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோா் பழிக்கும் வினை’ என்ற மறைமொழியை மறைவாக வைத்து விட்டுக் கூச்சமோ, குற்ற உணா்ச்சியோ, பயமோ இன்றி தங்கள் பணியின், பதவியின் அடையாளத்தைக் கூட மாற்றிக் கொள்ளாது கொள்ளையிடும் போக்கை என்னவென்பது?
சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக இந்தியப் பேரரசின் தேசிய நெடுஞ்சாலைதுறை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் வட்டம் பீமண்ணன் தாங்கல் கிராமத்தில், சா்வே எண் 310-இன் கீழ் உள்ள 43 ஏக்கா் நிலம் 73 நபா்கள் மீது இருந்ததன் பட்டாக்களை நீக்கி விட்டது அரசு. காரணம், இந்தப் பட்டாக்கள் போலியானவை என்பதே. எப்படி இந்த மோசடி நடந்தது என்பதை அறியும்போது, இது என்ன கொடுமை என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்த 43 ஏக்கா் நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.1,200 கோடி. கடந்த ஆண்டு பீமண்ணன் தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த ஒருவா், தமிழ்நாடு அரசின் அப்போதைய தலைமைச் செயலாளருக்கு சா்வே எண் 310 நிலத்திற்கு தனக்குப் பட்டா வேண்டும் என்று மனு கொடுக்கிறாா். தலைமைச் செயலாளா் இது பற்றி உடன் விசாரித்து நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறைக்கு ஆணையிடுகிறாா். தீவிர விசாரணையின்போது அதே சா்வே நம்பரில் உள்ள 7.5 ஏக்கா் நிலத்திற்கு ஆஷிஸ் மேத்தா என்பவா் 2000-ஆம் ஆண்டிலேயே பட்டா பெற்றிருப்பது தெரிய வருகிறது.
இந்த பட்டாவை திருவண்ணாமலை துணை செட்டில்மெண்ட் அலுவலா் மேற்படி நபருக்கு வழங்கி உள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் இந்த பட்டா போலியாகத் தயாரிக்கப்பட்டு அவா்க்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆஷிஸ் மேத்தா இந்த நிலத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு விற்று ரூபாய் 30 கோடி பெற்றிருக்கிறாா். இன்னொரு போலி பட்டாதாரா் ஒன்பது கோடி ரூபாய்க்கு நெடுஞ்சாலைத் துறையினரிடம் விற்றிருக்கிறாா்.
கடந்த மாா்ச் மாதம் நில நிா்வாக ஆணையாளா் பங்கஜ்குமாா் பன்சால் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு இது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்தது மட்டுமல்லாது, தேசிய நெடுஞ்சாலைத் துறையின் தலைவா் மூலம் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் செய்தாா்.
சிபிஐ அமைப்பு, ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் கொடுத்த மனுவின் அடிப்படையில், இரண்டு வருவாய்த்துறை அதிகாரிகள், நில பட்டாதாரா்களாக இருப்பவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அந்த கிராமத்தில் உள்ள 43 ஏக்கா் நிலத்திற்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை ரூ.102 கோடி வழங்கியுள்ளது தெரியவந்தது.
72 பட்டாதாரா்கள் போலியான பட்டாக்களைக் காட்டி பணம் பெற்றிருக்கிறாா்கள். வருவாய்த்துறை நிலங்களை பல ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘நிலச் சீா்திருத்தம்’ என்ற பெயரில் (எஸ்எல்ஆா்) அளவிட்டு வருவாா்கள். இந்த நிலங்களுக்கான நில சீா்திருத்தம் 1985-இல் நடை பெற்றிருக்கிறது.
இதன் அடிப்படையில் ரூபாய் 63 கோடியை 70 நபா்களுக்கு வழங்கியுள்ளது தேசிய நெடுஞ்சாலைத் துறை. 1985-இல் நடைபெற்ற நிலச் சீா்திருத்த சட்டத்திற்கு முன்பாக, 1960 முதல் 1970 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் எந்தவித ஆவணச் சான்றுகளும் இல்லாத நிலையில், இந்த எழுபது நபா்களுக்கு போலி பட்டா வழங்கியதை கண்டுபிடித்தனா். இதனால் தற்போது இந்த 43 ஏக்கா் பரப்பளவில் குடியிருப்போரும், சிறுவணிகா்களும் பாதிக்கப்பட்டு உள்ளனா்.
இதுபோல்தான் பிரதமரின் விவசாயிகள் நலத்திட்டம் ஒன்றின் வழி வேளாண்மை மக்களுக்கு அவரவா்கள் வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்பட்ட போது பல ஆயிரம் போலி கணக்குகள் தொடங்கி மோசடியாக பணம் பெற்றது வெளிச்சத்திற்கு வந்தது. அதுவும் அரசு அலுவலா்கள் துணையோடு என்ற அவலச் செய்தியும் வெளியானது.
அரசு அலுவலா்கட்கு இப்போதெல்லாம் கை நிறைய ஊதியம். உடலுழைப்பு நல்கி தினக்கூலி ஈட்டுவோா்க்கு ஒரு நாள் பணி செய்யவில்லை எனில் ஊதியம் இல்லை. உடல் தளா்வுற்ற காலத்தில் பிணி உற்ற நேரங்களில் யாா் தருவாா் ஊதியம்? உழைத்தால்தான் இல்லத்தில் அடுப்பெரியும். அதுவும் இந்நாளில் மது பழக்கம் இருப்பின் அதுவும் இல்லை.
ஆனால், ஒருவா் அரசுப் பணியில் சோ்ந்து விட்டால் அறுபது வயது வரை கவலையில்லாமல் மூன்று வேளையும் உண்ணலாம், உடுக்கலாம், ஓய்வெடுக்கலாம். எல்லா நாளும் வேலை நாளாகக் கருதி கருவூலக் கதவுகள் திறந்தே இருக்கும். ‘உண்பது நாழி, உடுப்பது இரண்டு’, ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பவை வெறும் வெற்றுச் சொற்கள் அல்ல. ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோா் தெளிந்த உயா் நலம் கூட்டும் மேன்மைச் சொற்கள்.
நாம் என்ன இருநூறு ஆண்டுகளாக வாழ்ந்து விடப் போகிறோம்? நாம் ஈட்டும் ஊதியம் நமது வாழ்நாள்வரை துணை செய்யாதா என்ன? ஏன் இந்த பணமோகம்? ‘படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான் ஐயோவென்று போவான்’ என்கிறாரே மகாகவி பாரதியாா். அரசு புறம்போக்கு நிலத்திற்குப் போலி பட்டா வழங்குவதும், அதனை அரசுக்கே விற்று கோடி கோடியாய் பணம் ஈட்டுவதும் அரசு அலுவலா்களின் நெஞ்சைச் சுடவில்லையா?
கிழக்கிந்திய கம்பெனி வணிகம் செய்ய இந்தியா வந்தபோது, போக்கிரிப் பிள்ளையொன்று இங்கிலாந்து கப்பலில் ஏறி இந்தியா வந்தடைந்தது. கப்பலை விட்டு இறங்கிய அந்தப் போக்கிரிப் பிள்ளைதான் ராபா்ட் கிளைவ். இவா்தான் இந்திய மண்ணில் பறங்கியா் ஆட்சிக்கு வழிகோலியவா். இதனால் இவா் முதல் தடவையாக இந்தியாவிலிருந்து இங்கிலாந்து சென்றபோது ராஜ மரியாதையை ஆங்கில அரசும், வணிக நிறுவனங்களும், பொதுமக்களும் நல்கினா்.
அதே ராபா்ட் கிளைவ் இரண்டாவது முறையாக இங்கிலாந்து சென்றபோது அவமரியாதையைத்தான் ஏற்க வேண்டி இருந்தது. காரணம், இவா் வங்காளத்தில் கவா்னராக இருந்தபோது முஸ்லிம் நவாபுகளிடம் லஞ்சம் பெற்றாா். இவா் மீது இங்கிலாந்து அரசு விசாரணை நடத்தி இவரது ஊழலைக் கண்டுபிடித்தது. பின்னா் இவா் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டாா் என்பது வரலாறு.
கடந்த மாதம், சென்னையில் காவலா்களே நகைக் கடையில் திருடிய சம்பவம் பரபரப்பானது. பல ஆண்டுகட்கு முன்னா் வட இந்தியாவில் வங்கி ஒன்றில் ஒருவா் தனது நிலம், கட்டடம் போன்றவற்றை அடைமானமாக வைத்து பெருந்தொகையைக் கடனாகப் பெற்றாா். கடன் பெற்று பல ஆண்டுகள் ஆன பின்னரும் கடன் தொகைக்கான வட்டியோ, அசலோ கட்டப்படவில்லை. வங்கி, பலமுறை அறிவிப்பு அனுப்பியும் பதில் இல்லை.
பிறகு வங்கி சட்டப்படி அவா் மீது நடவடிக்கை எடுத்து, அவரது சொத்துகளை ஏலத்திற்கு கொண்டு வர முற்பட்டது. குறிப்பிட்ட நாளில் பொதுமக்கள் முன்னிலையில் ஏலம் விடுவதற்கு முன்பு அந்த அசையா சொத்துக்களின் சந்தை மதிப்பை அறிந்து கொள்வதற்காக வங்கியின் உயரதிகாரிகள் சென்றபோது பேரதிா்ச்சி அடைந்தாா்கள்.
கடன் பெற்றவா் வங்கியில் சமா்ப்பித்த சா்வே எண்ணில் அவ்வூா் ரயில்வே ஸ்டேஷனும், கட்டடமும் இருந்தன. போலியாக ஆவணங்களைத் தயாரித்து கடன் பெற்றிருப்பது தெரிய வந்தது. கடன் வாங்கியவா் தலைமறைவாகி விட்டாா் என்பதையும் தெரிந்து கொண்டாா்கள். இப்படிப் போலி ஆவண தயாரிப்பில் அரசு அலுவலா்கள் ஈடுபட்டிருக்கக் கூடும் என்பதில் ஐயம் இல்லை.
திரைப்படம் ஒன்றில் எனது நிலத்தில் இருந்த கிணற்றைக் காணவில்லை என்று காவல்துறையிடம் புகாா் அளித்தபோது, கிணறு வெட்ட அரசிடம் நிதி பெற்று கிணறு வெட்டிய சான்றிதழைக் காட்டியது நினைவுக்கு வருகிறது.
இப்படி சட்டம் இயற்றும் பணியில் அதிகாரத்தில் இருப்பவா்களும், சட்டத்தை பரிபாலனம் செய்ய வேண்டிய அரசின் அலுவலா்களும் அன்றாடம் ஆங்காங்கு கிடைத்த வழிகளில் எல்லாம் முறைகேடுகளில் ஈடுபடுவது எதனால்? தொடக்கப் பள்ளிகளில், மேனிலைப் பள்ளிகளில், கல்லூரிகளில், ஆராய்ச்சி வகுப்புகளில் பாவ புண்ணிய வரலாறுகளோ, அறநெறியில் நின்றால் உன்னை உலகமே பாராட்டும் என்ற வகையிலான பாடங்களோ நடத்தப்படுவதில்லை.
பௌதிகம், ரசாயனம், கணிதம், வானவியல், இயற்பியல், உயிரியல் போன்ற உயா் பாடங்கள் படிப்பது மட்டும் போதாது. வாழ்க்கையில் எப்படி அரிச்சந்திரனைப் போலவும், மனுநீதிச் சோழனைப் போலவும், உண்மையை, நீதியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் கற்க வேண்டும்; கற்பிக்க வேண்டும். பயிருக்கு வேலிபோல் இருக்க அரசு அலுவலா்கள் பழக வேண்டும்; அரசு அவா்களைப் பழக்க வேண்டும்.
கட்டுரையாளா்: தலைவா், திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகம்.

India , Tiruvannamalai , Tamil-nadu , United-kingdom , Kanchipuram , Alaska , United-states , Madras , Company-business-do-india , Government-yet , India-empire

ஆல்போல் தழைத்து இமயம்போல் எழும்!- Dinamani


ஆல்போல் தழைத்து இமயம்போல் எழும்! 
By டாக்டர் கே.பி. இராமலிங்கம்  |  
Published on : 08th July 2021 03:42 AM  |   அ+அ அ-   |  
  |  
 
இந்திய அரசியல் சட்டம், இந்திய மோட்டார் வாகனச் சட்டம், இந்திய அரசுப் பணியாளர் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டம், இந்திய ஊழல் தடுப்புச் சட்டம் - இப்படி நாடாளுமன்ற இரு அவைகளின் மூலம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற சட்டங்கள் அனைத்தும் "இந்திய', "இந்திய' என்றுதான் இயற்றப்பட்டிருக்கின்றன. நீதிமன்றம், நிர்வாகம், பத்திரிகை, நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகள் எல்லாம் ஆங்கில ஏகாதிபத்தியம் இந்தியாவை அடிமையாக்கிய காலத்திலிருந்தே இருக்கின்றன. விடுதலை பெற்ற இந்தியாவிலும் 73 ஆண்டுகளாக இருந்து வருகின்றன. இந்தியாவின் எந்தவொரு மூலையிலும் "ஒன்றியம்' என்றோ "ஒன்றிய அரசு' என்றோ குரல் எழுந்ததில்லை. 
சீனாவின் சர்வாதிகார வஞ்சக மூளையில்கூட இப்படிப்பட்ட ஒரு எண்ணம் தோன்றவில்லை. இந்தியாவின் இறையாண்மையை எந்தச் சூழ்நிலையிலும் இழிவுபடுத்திடும் வகையில் பகை நாடுகளோ பயங்கரவாதிகளோ நினைத்துக்கூட பார்த்ததாக குறிப்பு இல்லை. ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள்கூட அங்குள்ள வீதிகளில் பாகிஸ்தான் தேசியக் கொடியை தூக்கிப் பிடித்து முழக்கமிட்டார்களே தவிர, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகக் குரல் எழுப்பவில்லை.
இந்தியாவில் உள்ள மாநிலங்களின் பெயர்களில் "நாடு' என்ற சொல் இடம் பெற்றிடவில்லை. ஆனால், "தமிழ்நாடு' என்று தமிழ் இனத்தைப் பெருமைப்படுத்துகின்ற வகையில் மத்திய அரசு மதித்ததோடு, "திராவிடநாடு' கொள்கையை கைவிட்ட அண்ணாவின் இந்திய இறையாண்மை உணர்வை பெருமைப்படுத்திடும் வகையில், பெயர் மாற்றத்தை ஏற்றுக்கொண்டது அன்றைய பிரதமர் நேருவின் தலைமையிலான மத்திய அரசு.
"மெட்ராஸ்' என்ற பெயர் மாற்றப்பட்டு "சென்னை' என்று பெயர் சூட்டப்பட்டது அன்றைய முதலமைச்சர் மு. கருணாநிதியால். ஆனால், "மெட்ராஸ் ஹைகோர்ட்' என்பது "சென்னை உயர்நீதிமன்றம்' என்று மாற்றம் பெற்றதா? "மெட்ராஸ் யுனிவர்சிட்டி' என்பது "சென்னைப் பல்கலைக்கழகம்' ஆனதா? ஏன் இந்த பெயர் மாற்றங்கள் நடைபெறவில்லை என்பதற்கான காரணங்களை இன்றைய அரசியல்வாதிகள் புரிந்துகொண்டார்களா? 
இந்தியப் பேரரசில் நிதி அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், ராணுவ அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், வருவாய்த்துறை அமைச்சகம் - இப்படி மத்திய அமைச்சர்களின் துறைகளுக்கெல்லாம் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. மாநிலங்களில் உள்ள அமைச்சர்களின் துறைகளுக்கு "அமைச்சகம்' என்று பெயரிடப்பட்டிருக்கிறதா? மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்படும் அறிக்கைகள் அந்தந்த அமைச்சகங்களின் பெயராலேயே வெளியிடப்படும். ஆனால், மாநிலங்களின் எந்தத் துறைக்கும் அந்த அதிகாரம் இல்லை. எல்லா அறிவிக்கைகளும் ஆளுநர் பெயரில்தான் வெளியிடப்படும் .
இந்திய நாட்டின் தேசியக் கொடியை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்; தேசிய கீதத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்; ஆகஸ்ட் 15 சுதந்திர திருநாளில் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் இந்திய நாட்டின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்துகிறார்; நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார்; குடியரசு நாளைக் கொண்டாடுகிறோம்; ஒவ்வொரு மாநிலத்திலும் மத்திய அரசின் துறைகள் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
எல்லையோரப் பாதுகாப்பில், பேரிடர் காலங்களில் இந்தியப் பேரரசின் இமாலயப் பணிகள் ஏராளம். கடலோர பாதுகாப்பிலும் மத்திய அரசுதான் ஈடுபடுகிறது. சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேட்புமனு தாக்கலில் தொடங்கி, வெற்றி பெற்ற பிறகு பதவியேற்கும்போது, "இந்தியப் பேரரசின் அரசியல் சாசனத்தின்படி...' என்றுதானே பதவியேற்கிறார்கள்? முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் எப்படி பதவிப் பிரமாணம் எடுக்கிறார்கள்? இந்திய அரசியல் சாசனப்படி உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகளில் பொறுப்புக்கு வருவோர் எதைச் சொல்லி பதவிப் பிரமாணம் எடுக்கிறார்கள்?
இந்தியாவின் எல்லையோர நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா, வங்க தேசம், நேபாளம், மியான்மர், இலங்கை, மோரீஷஸ் என அனைத்து நாடுகளையும் வளைத்துப் போட்டுக் கொண்டு, இந்தியாவையும் கபளீகரம் செய்ய காத்துக்கொண்டிருக்கின்ற சீனாவை விரட்டிட, 135 கோடி இந்திய மக்களைக் காத்திட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கண் துஞ்சாமல் பணியாற்றி வருகிறது.
இந்திய அரசியல் சாசனத்தின்படி முதல் தேர்தல் 1952-ஆம் ஆண்டில் நடந்தது. 1957-ஆம் ஆண்டுதான் திமுக நேரடியாக தேர்தலில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டது. 1962, 1967 என தொடர்ந்து அதிகாரபூர்வ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையத்திடம் பெற்று களத்தில் நின்றது. மத்தியில் பிரதமர் வி.பி. சிங் தலைமையிலான அரசிலும்,  வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசிலும், காங்கிரஸின் மன்மோகன் சிங் தலைமையிலான அரசிலும்  திமுக-வினர் அமைச்சர் பதவிகளில் அமர்ந்தனர். இந்தியா முழுவதும் இந்தியப் பேரரசின் திட்டங்களை திமுக அமைச்சர்கள் செயல்படுத்தினர்; அதிகாரம் செலுத்தினர்; பெரும் பணமும் சம்பாதித்து பெருவாழ்வு வாழ்கின்றனர்.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்து சென்றிட உறுதியாக இருந்தபோது, ஆங்கிலேயே அரசிடம் ஈ.வெ.ரா. ஆணித்தரமாக கேட்டிருந்தால் "திராவிட நாடு' என்று ஒரு பகுதியையும் பிரித்து வழங்கிட வெள்ளை ஏகாதிபத்தியம் தயங்கி இருக்காது. ஆனால் ஈ.வெ.ரா. மட்டும் என்ன செய்ய முடியும்? ஆந்திரம், கர்நாடகம், கேரளப் பகுதிகளைச் சேர்ந்த தலைவர்கள் யாரும் "திராவிட நாடு' என்ற முழக்கத்தைக் கண்டுகொள்ளவில்லை. மாறாக, அவர்கள் ஈ.வெ.ரா-வையும், அண்ணாவையும் பார்த்து கேலி பேசினார்கள் என்பதே உண்மை.
1967-ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தை திராவிட இயக்கங்கள் (தி.மு.க. - அ.தி.மு.க.) மாறிமாறி ஆண்டு கொண்டிருக்கின்றன. தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை இழந்தோம்; சேது கால்வாயில் இரண்டாயிரம் கோடி ரூபாய் பணத்தை அன்றைக்கு மத்தியில் அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு கொட்டினார்; முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு இல்லை; காவிரிப் பிரச்னை தீர்ந்தபாடில்லை; நதிகள் இணைப்பு பேச்சோடு சரி; ஈழப் பிரச்னையில் விடிவு இல்லை; அங்கு இரண்டு லட்சம் ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது திமுக மத்திய அரசில் அங்கம் வகித்தது; மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது. தமிழ் இனத்தின், தமிழ் மண்ணின் வீரர்கள், தீரர்கள் என்ன செய்தனர்? ஒருவர் கள்ளத்தோணியில் அங்கு சென்று வந்தார். காவல்துறை கைது செய்து, மாலையில் விடுவித்தது. பாசமும் நேசமும் பகல் வேடமானது. 
தாய்த் தமிழகம் காத்திடும், கரை சேர்த்திடும் என நம்பிய ஈழ மக்கள் நட்டாற்றில் விடப்பட்டனர். மாநில சுயாட்சியை திமுக மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது; புதிய கல்விக் கொள்கையை திமுக மட்டுமே எதிர்க்கிறது; ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் திறமையுள்ளவன் டாக்டராகிட "நீட் தேர்வு' ஒரு வரப்பிரசாதம் - அதை திமுக மாத்திரமே எதிர்க்கிறது. இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலத்திலும் எதிர்ப்புக் குரல் இல்லை. அங்கெல்லாம் சிறந்த அரசியல் தலைவர்கள் இல்லையா? உண்மை என்னவென்றால் தமிழகத்தின் தனியார் மருத்துவக் கல்லூரிகள் திமுக அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் சொந்தமானவை. 
"ஒன்றிய அரசு' என்ற புரிதல் இல்லாத ஒரு புதிய கூற்றை தமிழகத்தில் ஒரு சிலர் முணுமுணுத்திடத் தொடங்கியிருக்கின்றனர். இது "திராவிட நாடு திராவிடருக்கே' என்பதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டது. அதாவது,  "தமிழ்நாடு தமிழருக்கே' என்ற குழப்பத்தை மக்களிடம் விதைத்துக் கொண்டிருக்கின்ற நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோரின் தாக்கத்தின் விளைவுதான் இது. 
"நான் திராவிடன்' என்று தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் மார்தட்டுகிறார். "திராவிடநாடு' பிரிவினையை கைவிடுகின்ற முடிவுக்கு அண்ணா வந்தபோது, திருச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் பேசுவதற்காக, அண்ணா ஒரு நோட்டில் தன் கைப்பட பேச்சை எழுதித் தயாரித்தார். அண்ணாவால் அன்றைய திமுக பொதுக்குழுவில் படிக்கப்பட்ட உரைதான் திமுக-வின் அரசியல் சாசனம். அந்தப் பேச்சு, மு. கருணாநிதியின் அணிந்துரையோடு வெளிவந்திருக்கிறது. திமுக நண்பர்களே, தயவு செய்து அந்தப் புத்தகத்தை தேடிப் படியுங்கள். அதன்பின் திராவிடத்தைப் பற்றிப் பேசுங்கள்.
அப்படி ஒரு புத்தகத்தை பார்க்காமலே தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசியிருக்கிறார் 'ஒன்றிய அரசு என்றுதான் சொல்லுவேன்... சொல்லிக் கொண்டே இருப்பேன்...' என்று வீரம் பொங்கிட சூளுரைத்து இருக்கிறார். "வென்றவர் சொல்வதெல்லாம் வேதமாகி விடாது' என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். 
நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய ஐம்பெரும் சக்திகளை எப்படி அழைத்தாலும் அதன் தன்மை மாறிவிடாது; மாற்று குறைந்துவிடாது. இந்தியப் பேரரசை எறும்புகள்கூடியா இல்லாமல் ஆக்கிடமுடியும்? அது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆல்போல் தழைத்தோங்கி - இமயம்போல எழுந்து நிற்கும்! தொடர்ந்து சரித்திரம் படைத்திடும்!
கட்டுரையாளர்: தலைவர், இயற்கை நீர்வளப் பாதுகாப்பு இயக்கம்.

Jammu , Jammu-and-kashmir , India , Afghanistan , United-states , Karnataka , Tamil-nadu , Nepal , Brazil , China , Trichy , Kerala

AIADMK Leader O pannerselvam slams DMK goverment || மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல


Print
மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
பதிவு: ஜூலை
04, 
2021
12:29
PM
சென்னை,
 இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
'தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று கூறிய முத்துராமலிங்க தேவர் பிறந்த தமிழ் நாட்டில் தேசியத்திற்கு எதிரான செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதை பார்க்கும் போது தமிழ்நாடு திசைமாறிச் செல்கிறது என்கிற எண்ணம் பொதுமக்களிடையே மேலோங்கி நிற்கிறது.
2019 ஆம் ஆண்டு, ஜூலை 19 ஆம் தேதி தமிழக சட்டப் பேரவையில் பேசிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இப்போதைய முதல்வர் ஸ்டாலின், வரக்கூடிய காலகட்டத்திலேயே திமுக ஆட்சிக்கு வரப் போகிறது அப்படி வருகிற நேரத்தில் தேர்தலில் நாங்கள் என்ற உறுதிமொழியை வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோமோ அவற்றை நிச்சயமாக செய்வோம். சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்வோம் என்று கூறினார். ஒருவேளை அந்த சொல்லாததில் 'ஒன்றிய அரசு' என்ற வார்த்தையும் 'ஜெய்ஹிந்த்' என்ற சொல் ஆளுநர் உரையில் இடம் பெறாததால் தமிழகம் தலைநிமிர்ந்து விட்டது என்ற வாசகமும் அடங்கி உள்ளது போலும்.
திமுக ஆட்சி தமிழகத்தில் அமைந்ததிலிருந்து மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. அதற்கான காரணத்தை தமிழக முதல்வர் கடந்த ஜூன் 23 அன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் அளித்திருப்பது விசித்திரமாக இருக்கிறது. அதிலே இந்திய அரசமைப்பு சட்டத்தின் முதல் வரி இந்தியா அதாவது பாரதம் மாநிலங்களைக் கொண்ட ஒரு ஒன்றியமாக இருக்கும் என்று குறிப்பிட்டு இருப்பதாக சுட்டிக் காட்டி அதைத்தான் பயன்படுத்துகிறோமே தவிர சட்டத்தில் இல்லாத நாங்கள் பயன்படுத்தவில்லை என்றும் ஒன்றியம் என்பது தவறான சொல் அல்ல என்றும் மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது என்பதே அதன் பொருள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அது பொருளல்ல சட்டமேதை அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசமைப்பு சட்டம் பகுதி 5 இன் படி யூனியன் என்றால் பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய இந்திய நாட்டைக் குறிக்கும் சொல்லே தவிர இந்திய அரசை குறிக்கும் சொல் அல்ல. எனவே யூனியன் ஆஃப் ஸ்டேட் என்பதற்கு பொருள் மாநிலங்களை உள்ளடக்கிய யூனியன் என்பதுதான். தமிழக முதல்வர் தனது பேச்சில் அண்ணா 1963 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் பேசியதையும், மா.பொசியும், ராஜாஜியும் குறிப்பிட்ட சில வார்த்தைகளை சுட்டிக்காட்டி அவற்றில் கூட்டாட்சி தத்துவம் அடங்கி இருக்கிறது என்றும் அதற்காக ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறோம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
கூட்டாட்சி தத்துவம் குறித்து தலைவர்கள் கூறிய வார்த்தைகளை வைத்து இந்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிடுகிறோம் என்பதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. இந்த ஒப்பீடு பொருத்தமானதாக இல்லை. ஏனென்றால் எந்த தலைவரும் இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறவில்லை இன்னும் சொல்லப்போனால் மாநிலங்கள் திருப்பித் தரப்பட்டுள்ளது என்று தான் அண்ணாவே 1963 மக்களவையில் பேசியிருக்கிறார்.
அதாவது மாநிலங்களை பிரித்து கொடுப்பதற்கான அதிகாரம் இந்திய அரசிடம்தான் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார். எனவே மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது என்பதுதான் யூனியன் என்ற வார்த்தையின் பொருள் என்ற வாதம் சரியானதல்ல. மொத்தத்தில் மாநிலங்களை உள்ளடக்கிய யூனியன் என்பதுதான் யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ் என்பதற்கு பொருள் என்பதையும் இந்திய நாடு பிரிக்கப்பட முடியாத ஒன்றிணைக்கப்பட்ட ஒரு தேசம் என்பதையும் யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ் என்ற வாசகம் நமக்கு உணர்த்துகிறது என்பதும் இந்த தருணத்தில் நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
அதே சமயத்தில் இந்திய அரசைப் பற்றி குறிப்பிடும்போது கவர்மெண்ட் ஆப் இந்தியா என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது எனவே இந்திய நாட்டை ஆளும் ஒரு அரசைக் குறிப்பிடும் போது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்திய அரசு என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமான ஒன்றாகும். ஆனால் இப்போதைய திமுக அரசு ஒன்றிய அரசு என்று குறிப்பிடுகிறது. தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட பல அரசினர் தீர்மானங்களில் இந்திய பேரரசு என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டிருப்பதை இந்த தருணத்தில் நான் நினைவூட்ட விரும்புகிறேன்.
இந்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்வது நமது இந்தியத் திருநாட்டை கொச்சைப்படுத்துவது போல் சிறுமைப்படுத்துவது போல் அமைந்து உள்ளது என்று தமிழ்நாட்டு மக்கள் நினைக்கிறார்கள் என்பதை முதலில் முதல்வருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மத்திய அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து தமிழ்நாட்டின் உரிமைகளை, கோரிக்கைகளை, வாழ்வாதாரப் பிரச்சினைகளை, நலன்களை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்காமல் இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி சிறுமைப் படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல என்பதையும் இதுபோன்ற செயல் ஏற்றுக் கொள்ள கூடியது அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தொடர்புடைய செய்திகள்
1.
மாநிலங்களுக்கு உரிய ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்காமல் மத்திய அரசு ஏமாற்றுகிறது என்று குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
2.
கொரோனா விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
3.

India , Madras , Tamil-nadu , Bharat , Rajya-sabha , Panneer-selvam , Lok-sabha , Hc-article-the-convention , Hc-legislative-assembly , Movie-step-union , Central-state , July-yes

இந்திய அரசை ஒன்றிய அரசு என்று சிறுமைப்படுத்துவது ஏற்கக்கூடியது அல்ல- ஓ.பன்னீர்செல்வம்

இந்திய அரசை ஒன்றிய அரசு என்று சிறுமைப்படுத்துவது ஏற்கக்கூடியது அல்ல- ஓ.பன்னீர்செல்வம்
maalaimalar.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from maalaimalar.com Daily Mail and Mail on Sunday newspapers.

India , Madras , Tamil-nadu , Bharat , Rajya-sabha , Chempakaraman-pillai , U-muthuramalingam-thevar , Vande-mataram , Netaji-subhash , Panneer-selvam , Tiruppur-kumaran , Jayalalithaa-name-university

জ্ঞানচর্চা ও সামাজিকতার দ্বিমুখী সংগ্রাম | 1048650 | কালের কণ্ঠ

জ্ঞানচর্চা ও সামাজিকতার দ্বিমুখী সংগ্রাম | 1048650 | কালের কণ্ঠ
kalerkantho.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from kalerkantho.com Daily Mail and Mail on Sunday newspapers.

Bengali , Bangladesh-general- , Bangladesh , India , United-kingdom , Pakistan , Dhaka , Dhakaa-university , English-governor , India-empire , Bengali-province

জ্ঞানচর্চা ও সামাজিকতার দ্বিমুখী সংগ্রাম | 1048764 | কালের কণ্ঠ

জ্ঞানচর্চা ও সামাজিকতার দ্বিমুখী সংগ্রাম | 1048764 | কালের কণ্ঠ
kalerkantho.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from kalerkantho.com Daily Mail and Mail on Sunday newspapers.

Bengali , Bangladesh-general- , Bangladesh , India , United-kingdom , Pakistan , Dhaka , Dhakaa-university , English-governor , India-empire , Bengali-province